ஈரோட்டில் மின்சாரம் தாக்கி மாடு சாவு


ஈரோட்டில் மின்சாரம் தாக்கி மாடு சாவு
x

ஈரோட்டில் மின்சாரம் தாக்கி மாடு சாவு

ஈரோடு

நேற்று மாலை மழை பெய்யத்தொடங்கி இரவிலும் விட்டு விட்டு பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இடி -மின்னல் அதிக அளவில் இருந்ததால் மாநகரில் பல்வேறு இடங்களில் நேற்று இரவில் மின்சாரம் தடைப்பட்டது.

இதற்கிடையில் ஈரோடு குப்பைக்காடு பகுதியில் பாரம் ஏற்றிக்கொண்டு மாட்டு வண்டி ஒன்று வந்தது. இந்த வண்டியில் பூட்டப்பட்டு இருந்த மாடு, ரோட்டோரம் பொறுத்தப்பட்டு இருந்த 'எர்த் கம்பி' அருகில் சென்றது. அப்போது மாட்டின் கால் 'எர்த் கம்பி' அருகில் இருந்த குழிக்குள் சிக்கியபோது மின்சாரம் தாக்கியது. இதில் சுருண்டு கீழே விழுந்த மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.


Next Story