மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x

மன்னார்குடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

திருவாரூர்

மன்னார்குடி;

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வினோபாஜி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது49). அலுமினிய கதவு, ஜன்னல் செய்யும் தொழிலாளியான இவா் நேற்று வீட்டில் பழுதடைந்த சுவிட்ச் போர்டை சரி செய்தாா். அப்ேபாது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story