மின் பணியாளர்கள் பாதுகாப்பு கூட்டம்


மின் பணியாளர்கள் பாதுகாப்பு கூட்டம்
x

மின் பணியாளர்கள் பாதுகாப்பு கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை:

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நெல்லை மின்பகிர்மான வட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டம் சேரன்மாதேவி துணைமின் நிலைய அலுவலகத்தில் மின் பணியாளர்கள் பாதுகாப்பு குறித்த கூட்டம் நடந்தது. கோபாலசமுத்திரம் பிரிவு இளநிலை மின் பொறியாளர் இருளாண்டி தலைமை தாங்கினார். அவர், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மின் பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் பணியாற்றிட வேண்டும். பொதுமக்களுக்கு தங்குதடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விளக்கி பேசினார்.

இந்த கூட்டத்தில் கோபாலசமுத்திரம் பிரிவு அலுவலகம் மற்றும் சேரன்மாதேவி துணை மின் நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story