எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை


எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
x

குடும்பத் தகராறில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சிநகர் புற்று கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் நவீன் (வயது 25). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த நவீன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story