எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை


எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
x

ஆம்பூர் அருகே எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் அருகே துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35), எலக்ட்ரீசியன்.

இவருக்கும் நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்த மல்லிகா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மல்லிகா சுரேசை பிரிந்து அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் நாட்டறம்பள்ளிக்கு சுரேஷ் சென்று மல்லிகாவை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால் மல்லிகா வர மறுத்துவிட்டார்.

இதனால் மனவேதனையோடு வீடு திரும்பிய சுரேஷ் இன்று வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story