சரக்கு வேன் மோதி எலக்ட்ரீசியன் பலி


சரக்கு வேன் மோதி எலக்ட்ரீசியன் பலி
x
தினத்தந்தி 21 Feb 2023 7:00 PM GMT (Updated: 21 Feb 2023 7:00 PM GMT)
திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள வக்கம்பட்டியை சேர்ந்தவர் ஜோசப் ஆனந்த் (வயது 46). எலக்ட்ரீசியன். அவருடைய மனைவி ஜெனாவோராணி. இவர், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு ஜெசிகா (13), ரசிகா (11) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில் ஜோசப் ஆனந்த் நேற்று வீட்டில் இருந்து வக்கம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு வருவதற்காக திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து செம்பட்டியை நோக்கி சென்ற சரக்கு வேன் ஒன்று எதிர்பாராத விதமாக ஜோசப் ஆனந்த் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோசப் ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, ஏட்டு நல்லுசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ஜோசப் ஆனந்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சரக்கு வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story