எலக்ட்ரீசியன் வீட்டில் 12 பவுன் நகைகள்-பணம் கொள்ளை


எலக்ட்ரீசியன் வீட்டில் 12 பவுன் நகைகள்-பணம் கொள்ளை
x

எலக்ட்ரீசியன் வீட்டில் 12 பவுன் நகைகள்-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

வீட்டில் இருந்து தப்பியோடினர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியை சேர்ந்தவர் மார்க்கண்டேயன்(வயது 67). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக சென்றுவிட்டார்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் அவரது மனைவி ரேவதி, மாமியார் ரச்சம்மாள் ஆகியோர் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் திடீரென வீட்டிற்குள் சத்தம் கேட்டு ரேவதி எழுந்துள்ளார். அப்போது 2 பேர் வீட்டில் இருந்து தப்பியோடியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

நகை-பணம் கொள்ளை

பின்னர் அவர் வீட்டிற்குள் உள்ள பீரோவை பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகைகள் மற்றும் ரூ.8 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ைள சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story