திருத்தணியில் 14-ந் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


திருத்தணியில் 14-ந் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x

திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.

திருவள்ளூர்

திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 14-ந் தேதி நண்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது குறைகளை புகாராக தெரிவிக்கலாம். மேலும் உங்கள் கோரிக்கைகள் குறித்தும் மனுவாகவும் கொடுக்கலாம். எனவே திருத்தணி கோட்ட விவசாயிகள் மற்றும் மின்நுகர்வோர்கள் கூட்டத்தில் பங்கேற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story