தென்னந்தோப்பில் புகுந்து யானைகள் அட்டகாசம்


தென்னந்தோப்பில் புகுந்து யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 15 Dec 2022 6:45 PM GMT (Updated: 15 Dec 2022 6:45 PM GMT)

தென்னந்தோப்பில் புகுந்து யானைகள் அட்டகாசம்

விருதுநகர்

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியையொட்டி செல்லபிள்ளை ஊருணி அருகே ராஜபாளையத்தை சேர்ந்த ராமகிருஷ்ண ராஜா என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு புகுந்த காட்டு யானைகள் 40-க்கும் மேற்பட்ட தென்னங்கன்று குருத்துகளை அடியோடு பிடுங்கி சேதப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து விவசாயி கூறியதாவது, காய்ப்பு பருவத்திற்கு வந்த பாதி மரங்களும், 2 வருடங்கள் வளர்த்த தென்னங்கன்றுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். தென்னந்தோப்பில் முகாமிட்டுள்ள யானை கூட்டங்களை வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன், தகுந்த இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story