மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிநிதிநிறுவன ஊழியர் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிநிதிநிறுவன ஊழியர் பலி
x

பரமத்திவேலூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் இறந்தார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

நிதிநிறுவன ஊழியர்

பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே உள்ள பெரியசோளிபாளையம், தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை மகன் தமிழ்செல்வன் (வயது 25). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் மோகனூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் இவர் நேற்று காலை நிதி நிறுவனத்திற்கு வசூல் பணிக்காக பரமத்திவேலூர் அருகே உள்ள அனிச்சம்பாளையத்திற்கு சென்றார். பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் அனிச்சம்பாளையத்தில் இருந்து பரமத்திவேலூர் செல்ல நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பைபாஸ் சாலையில் அனிச்சம்பாளையம் பிரிவு சாலையை கடக்க முயன்றார்.

பலி

அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் ஒன்று தமிழ்செல்வன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற பரமத்திவேலூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வன் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் ராசிபுரத்தை சேர்ந்த கார்த்திக் (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story