மின்சாரம் தாக்கி ஊழியர் பலி


மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
x

காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் இறந்தார்.

தர்மபுரி

காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெங்குசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 55). இவர் மாட்லாம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று காலை கெஜ்ஜல்நாயக்கன்பட்டி என்ற பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மின் வயரில் மின்சாரம் வினியோகம் வந்ததால் ஊழியர் சிவலிங்கம் மின்சாரம் தாக்கி கம்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story