வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி


வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 12 Aug 2023 1:00 AM IST (Updated: 12 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

அன்னதானப்பட்டி:-

சேலம் செவ்வாய்பேட்டை நரசிம்மன் செட்டி சாலை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 37). தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று இரவு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் கணேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் இறந்தார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story