வேலைவாய்ப்பு முகாமில் 25 பேருக்கு பணியாணை


வேலைவாய்ப்பு முகாமில் 25 பேருக்கு பணியாணை
x

திருப்பத்தூரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 25 பேருக்கு பணியாணை வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. முகாமில் 6 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. 10, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ, செவிலியர், பொறியியல் படித்த 120 பேர் கலந்துகொண்டனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. முகாமை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டார். முகாமில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story