வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை


வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை
x

கெங்கவல்லி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

கெங்கவல்லி:-

கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன், கூலித்தொழிலாளி. இவருடைய மகன் நவீன் குமார் (வயது 23). என்ஜினீயரான இவருக்கு வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி அவருடைய குடும்பத்தினர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் ஏன் இருக்கிறாய் என்று திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த நவீன்குமார் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார். உடனடியாக அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நவீன்குமார் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து, கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story