என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை


என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
x

பரமத்திவேலூர் அருகே என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

பரமத்தி வேலூர்

என்ஜினீயர்

பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் அரவிந்த் (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியில் இருந்த போது விபத்து ஏற்பட்டது. இதனால் சொந்த ஊரான பொத்தனூருக்கு வந்துவிட்டார்.

இந்தநிலையில் அரவிந்த் வீட்டிற்கு வந்ததில் இருந்தே மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மதியம் அரவிந்த் வெகுநேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அரவிந்த் அறைக்கு சென்று பார்த்தனர்.

விசாரணை

அப்போது அவர் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அரவிந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story