திருமணம் ஆகாத விரக்தியில்என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணம் ஆகாத விரக்தியில்என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
x

நாமக்கல்லில் திருமணம் ஆகாத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

சாப்ட்வேர் என்ஜினீயர்

நாமக்கல்லில் உள்ள பரமத்தி சாலை கொங்குநகர் காலனியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் விஜயக்குமார் (வயது 29). சாப்ட்வேர் என்ஜினீயர். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த விஜயக்குமார், தற்போது வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

தந்தை கந்தசாமியும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த விஜயக்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது உறவினர்கள் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற போலீசார் விஜயகுமாரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை

இதற்கிடையே இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது தாயார் பாப்பாத்தி (60) நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தந்தை இறந்த நிலையில், திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story