என்ஜினீயர் தற்கொலை


என்ஜினீயர் தற்கொலை
x

வடமதுரை அருகே தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டியபட்டியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 30). முதுகலை பொறியியல் பட்டதாரியான இவர், மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக, வீட்டில் இருந்தபடியே நவீன்குமார் பணிபுரிந்தார். அவருடைய அக்காள் கோகிலாவுக்கு சொந்தமான வீடு, வடமதுரை அருகே சின்ன ரெட்டியப்பட்டியில் உள்ளது. அந்த வீட்டில், நவீன்குமார் மட்டும் தனியாக தங்கி இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நவீன்குமாரை அவரது தந்தை வரதராஜன் செல்போனில் அழைத்தார். ஆனால் பலமுறை செல்போனில் அழைத்தும் நவீன்குமார் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வரதராஜன், அதே பகுதியில் வசிக்கிற அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டின் படுக்கை அறையில் நவீன்குமார் வேட்டியால் தூக்குப்போட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்தார். அவரை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு நவீன்குமாரை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் வரதராஜன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து, நவீன்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story