என்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை


என்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை
x

கறம்பக்குடி அருகே காதல் தோல்வியால் என்ஜினீயரிங் மாணவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

காதல் தோல்வி

கறம்பக்குடி அருகே உள்ள பந்துவக்கோட்டையை சேர்ந்தவர் சிவஞானம். இவரது மகன் மகேந்திரன் (வயது 18). இவர் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் ஒரு பெண்னை காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரது காதல் தோல்வியில் முடிந்தது.

மாணவர் தற்கொலை

இதனால் மனமுடைந்த கல்லூரி மாணவர் மகேந்திரன் சம்பவத்தன்று குளிர்பானத்தில் எலிமருந்தை (விஷம்) கலந்து குடித்து மயங்கினார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் நேற்று இறந்தார்.

இதுகுறித்து மகேந்திரனின் தந்தை சிவஞானம் ரெகுநாதபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story