தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய என்ஜினீயரிங் மாணவர் பிணமாக மீட்பு


தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய என்ஜினீயரிங் மாணவர் பிணமாக மீட்பு
x

அம்பையில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய என்ஜினீயரிங் மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பையில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய என்ஜினீயரிங் மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.

என்ஜினீயரிங் மாணவர்

தென்காசி சொர்ணபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஜெய்னுலாப்தீன். தற்போது பொட்டல்புதூரில் வசித்து வரும் இவரது இரண்டாவது மகன் ரஜப் மீரான். என்ஜினீயரிங் மாணவரான இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அம்பை சின்ன சங்கரன்கோவில் அருகே தாமிரபரணி ஆற்றிற்குச் சென்று குளித்தார். அப்போது ஆழமான பகுதியில் மூழ்கி மாயமானார்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அவரை தேடினர். இரவு வரை தேடியும் கிடைக்காததையடுத்து நேற்று மீண்டும் அவரை தேடும் பணியை தொடர்ந்தனர்.

பரிதாப சாவு

சுமார் 6 மணி நேர தேடலுக்குப்பின் படித்துறைக்கும், அணைக்கட்டுக்கும் நடுவில் பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த ரஜப் மீரான் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவரின் பரிதாப சாவு குறித்து அம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story