என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 23 Feb 2023 6:45 PM GMT (Updated: 24 Feb 2023 6:05 AM GMT)

கோவை அத்திப் பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை அத்திப் பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

என்ஜினீயரிங் மாணவர்

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் கண்டியன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகன்கள் சசிகுமார் (19), விஜயகுமார் (18). இவர்கள் 2 பேரும் கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் அத்திப்பாளையம் பகுதியில் உள்ள ரங்கநாதர் என்ஜினீயரிங் கல்லூரியில், விடுதியில் தங்கியிருந்து படித்து வந்்தனர். இதில், சசிகுமார் 2-ம் ஆண்டும், விஜயகுமார் முதலாம் ஆண்டும் படித்தனர்.

இந்த நிலையில் விஜயகுமார் நேற்று முன்தினம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் இருந்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

பின்னர் கல்லூரி முடிந்து மாணவர்கள் விடுதி அறைக்கு சென்றனர். அப்போது விஜயகுமார் தனது அறையில், மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள், உடனடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கல்லூரி மாணவர் இறந்தது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கோவில்பாளையம் போலீசார் மாணவரின் உடலை மீட்டு, அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை

தொடர்ந்து கல்லூரி மாணவர் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விஜயகுமார் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது உள்பட பல்ேவறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story