சாதனை படைத்த விழுப்புரம் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

சர்வதேச கராத்தே போட்டியில் சாதனை படைத்த விழுப்புரம் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழுப்புரம்,
மலேசியாவில் நடந்த சர்வதேச அளவிலான 18-வது கராத்தே போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட விழுப்புரம் தனியார் பள்ளி மாணவர்களான பிரனவ்குமரன், சபரிஷ் ஆகியோர் தலா 2 தங்க பதக்கமும், பிரவீன்குமார் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.
அதைத்தொடர்ந்து மலேசியாவில் இருந்து சொந்த ஊரான விழுப்புரத்துக்கு வந்த மாணவர்கள் 3 பேருக்கு அவர்களது பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





