தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள்


தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள்
x

தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள்

மதுரை

சோழவந்தான்

சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு செயல் அலுவலர் சுதர்சனன் தலைமை தாங்கினார். தூய்மைப்பணி ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கினார். துணைத்தலைவர் லதாகண்ணன், வார்டு கவுன்சிலர்கள் சத்யபிரகாஷ், குருசாமி, செந்தில்வேல், முத்துச்செல்வி சதீஷ்குமார் உள்பட பணியாளர்கள் கலந்து கொண்டனர். பணியாளர் அசோக் குமார் நன்றி கூறினார்.


Next Story