யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள்


யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள்
x

ஆரணி அரசு மருத்துவமனையில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனையில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் மமதா தலைமை தாங்கினார்.

விழாவில் ஆரணி நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் செந்தில்குமார் கலந்துகொண்டு, யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.

இதில் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ, யானைக்கால் நோய் பிரிவு அலுவலர் அசோக்குமார், களப்பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


Next Story