ராஜபாளையத்தில் மாலை நேர உழவர் சந்தை


ராஜபாளையத்தில் மாலை நேர உழவர் சந்தை
x

ராஜபாளையத்தில் மாலை நேர உழவர் சந்தை தொடங்கப்படும் என கலெக்டர் கூறினார்.

விருதுநகர்

விருதுநகர்,

விவசாயிகள் அழுகக் கூடிய பொருட்கள் தவிர பிற வேளாண் பொருட்களை தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றையும் உற்பத்தி செய்கின்றனர். இத்தகைய விவசாய பொருட்களை இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக சந்தைகளில் விற்பனை செய்யும் போது விவசாயிகளுக்கும் உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கும் வருவாய் அதிகரிப்பதோடு நுகர்வோருக்கும் தரமான பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே காலை நேரங்களில் செயல்படும் உழவர் சந்தைகளில் தற்போது விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் கோரிக்கையின் அடிப்படையில் மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தையை தேர்ந்தெடுத்து மாலை நேர உழவர் சந்தை செயல்பட உள்ளது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் நுகர்வோர் வருகை அதிகம் உள்ள ராஜபாளையம் உழவர் சந்தையில் மாலை நேர சந்தை தொடங்கப்பட உள்ளது. இம்மாலை நேர உழவர் சந்தை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். விவசாயிகள் விளைவிக்கும் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், உணவு உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், வெல்லம், காளான், நாட்டு முட்டை உள்ளிட்ட விவசாய பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. மாலை நேர சந்தைகளில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், அடையாள அட்டைகள் பெற வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண்மை வணிகம்) விருதுநகர் அலுவலகம் அல்லது சந்தை நிர்வாக அலுவலர், ராஜபாளையம் உழவர் சந்தையை தொடர்பு கொள்ள வேண்டும். எனவே பொதுமக்கள் தரமான அரிசி, பருப்பு மற்றும் பிற உணவு பொருட்களை வாங்குவதற்கு மாலை நேர உழவர் சந்தையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் மேகநாத ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.


1 More update

Next Story