மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஈவிகேஎஸ் இளங்கோவன்...!


மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஈவிகேஎஸ் இளங்கோவன்...!
x

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு கிழக்குத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குணமடைந்து வீடு திரும்பினார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிறகு இவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. சில தினங்களுக்கு பின், அவர் நலமுடன் இருப்பதாகவும், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

சுவாசக்கோளாறு, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , ஈ வி கே எஸ் இளங்கோவன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அனைத்து பரிசோதனைகளும் முடிந்து வீடு திரும்பியுள்ளார்.


Next Story