திருவாரூரில், வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி


திருவாரூரில், வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி
x
தினத்தந்தி 8 July 2023 7:15 PM GMT (Updated: 8 July 2023 7:15 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருவாரூரில் வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது

திருவாரூர்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருவாரூரில் வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சரிபார்க்கும் பணி

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, திருவாரூர் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.

இதற்கான பணிகளை பெங்களூரு பாரத் மின்னணு நிறுவனத்தின் என்ஜினீரியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

அரசியல் கட்சி பிரதிநிதிகள்

முதல் நிலை சரிபார்க்கும் பணி காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்து வருகிறது. நாளை (திங்கட்கிழமை) வரை திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பு வைப்பறையில் இந்்த பணி நடைபெற உள்ளது.

இந்த பணிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பார்வையிடலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story