மீட்பு பணிகளில் ஈடுபட முன்னாள் படை வீரர்கள் பதிவு செய்யலாம்


மீட்பு பணிகளில் ஈடுபட முன்னாள் படை வீரர்கள் பதிவு செய்யலாம்
x

பேரிடா் காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட முன்னாள் படை வீரர்கள் பதிவு செய்யலாம் என கலெக்டா் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்


திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பேரிடா் காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட முன்னாள் படை வீரர்கள் தன்னார்வலர்களாக ஈடுபடலாம். எனவே இதில் விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள், திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ (04366 -290080) தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story