மழையினால் அகழாய்வு பணி பாதிப்பு
தாயில்பட்டி அருேக மழையினால் அகழாய்வு பணி பாதிக்கப்பட்டது.
விருதுநகர்
தாயில்பட்டி,
தாயில்பட்டி, தெற்கு ஆணை கூட்டம், கணஞ்சாம் பட்டி, கோமாளிபட்டி, செவல்பட்டி, துலுக்கன்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. இதனால் பட்டாசு உற்பத்தி நடைபெறவில்லை. எனவே பட்டாசு ஆலைகள், பேப்பர் குழாய் தயாரிக்கும் கம்பெனிகள், தீப்பெட்டி ஆலைகள் ஆகியவை மூடப்பட்டன. மேலும் விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு குழிகள் சேதமடையாமல் இருக்க தார்ப்பாய் போட்டு மூடப்பட்டன. சாரல் மழையினால் அகழாய்வு பணிகள் நடைபெறவில்லை.
Related Tags :
Next Story