ரெயில்வே கேட் உடைந்து விழுந்ததால் பரபரப்பு
அய்யலூரில் ரெயில்வே கேட் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்
திருச்சி-திண்டுக்கல் ரெயில் மார்க்கத்தில், புத்தூர் சாலையின் குறுக்கே அய்யலூர் களர்பட்டியில் ரெயில்வே கேட் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்த வழித்தடத்தில் ரெயில் வந்தபோது, ஊழியர் ரெயில்வே கேட்டை மூட முயன்றார். அப்போது திடீரென ரெயில்வே கேட் உடைந்து விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
சிறிது நேரத்தில் அந்த ரெயில்வே கேட்டை ரெயில் கடந்து சென்றது. அதன்பிறகு ஊழியர்கள், ரெயில்வே கேட்டை சரி செய்தனர். அடிக்கடி திறந்து மூடுகிற ெரயில்வே கேட்டை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story