கடல் அரிப்பால் வெளியே தெரிந்த மனித மண்டை ஓடுகள்


கடல் அரிப்பால் வெளியே தெரிந்த மனித மண்டை ஓடுகள்
x
தினத்தந்தி 17 Sep 2023 6:45 PM GMT (Updated: 17 Sep 2023 6:46 PM GMT)

சாயல்குடி அருகே கடல் அரிப்பு காரணமாக வெளியே மனித மண்டை ஓடுகள் தெரிந்தன

ராமநாதபுரம்

சாயல்குடி

சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் ஊராட்சி ரோச்மாநகர் கடற்கரை பகுதியில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்படுவதாக மீனவர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடல் சீற்றம் மற்றும் கடல் அரிப்பு அதிகரித்து அப்பகுதியில் கடற்கரை அருகில் புதைக்கப்பட்டிருந்த கல்லறையில் இருந்து மனித மண்டை ஓடுகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. இதனால் அப்பகுதி மீனவர்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். மேலும், தொடர்ந்து கடல் அரிப்பு அதிகரித்து வருவதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தி வைக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வீடுகளும் கடல் அரிப்பில் இடிந்து விழுந்து விடுமோ என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையே கடலோர பகுதியில் இருந்த தென்னை, பனை மரங்கள் சாய்ந்து விழுந்து கிடக்கின்றன. எனவே, இப்பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் அரிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு தூண்டில் வளைவு உள்ளிட்ட கட்டமைப்புகளை மாவட்ட நிர்வாகம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story