கைதான 4 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு


கைதான 4 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
x

இளம்பெண் பாலியல் வழக்கில் கைதான 4 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜீனத் அகமது உள்பட 4 பேரும் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிபதி கோபிநாத், வருகிற 9-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர்கள் 4 பேரையும் மதுரை சிறையில் அடைத்தனர்.


Next Story