4 பேருக்கு காவல் நீட்டிப்பு


4 பேருக்கு காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 19 May 2023 6:45 PM GMT (Updated: 19 May 2023 6:45 PM GMT)

பரமக்குடி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் 4 பேருக்கு காவல் நீட்டிப்பு செய்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பரமக்குடி 3-வது வார்டு கவுன்சிலரும், அப்போதைய அ.தி.மு.க நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது மற்றும் புரோக்கர்களாக இருந்து செயல்பட்ட உமா மற்றும் கயல்விழி ஆகிய 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகி சிகாமணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மற்ற 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று ராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் வழக்கினை விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story