தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறிப்பு


தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறிப்பு
x

தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

வேலூர் ஆர்.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் இம்தியாஸ் (வயது 48), தொழிலாளி. இவர் கடந்த மாதம் 19-ந்தேதி உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் இரவில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே சென்ற போது 2 மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.500-ஐ பறித்துக்கொண்டு சென்றனர்.

இதுகுறித்து இம்தியாஸ் வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் கத்தியை காட்டி மிரட்டி இம்தியாசிடம் செல்போன், பணம் பறித்தது வேலூர் முள்ளிப்பாளையம் திடீர்நகரை சேர்ந்த அய்யப்பன் என்கிற அலி (21) மற்றும் சத்துவாச்சாரி வ.உ.சி.நகரை சேர்ந்த 16 வயது சிறுவன் என்று தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான 2 பேர் மீதும் வேலூர் தெற்கு, சத்துவாச்சாரி போலீஸ் நிலையங்களில் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.

1 More update

Next Story