டாஸ்மாக் பார் ஊழியரிடம் பணம் பறிப்பு

டாஸ்மாக் பார் ஊழியரிடம் பணம் பறித்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையை சேர்ந்தவர் ராஜா (வயது 30). இவர் கோவை புலியகுளத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ராஜா வேலை செய்து கொண்டிருந்தபோது, பாருக்கு புலியகுளம் அந்தோணியார் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சார்லஸ் (வயது 26) என்பவர் வந்தார்.
திடீரென அவர் பீர் பாட்டிலை உடைத்து ராஜாவின் கழுத்தில் வைத்து மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.900 ஆயிரத்தை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சார்லசை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





