டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு
![டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/02/23/1156396-knife-woman.webp)
ரத்தினபுரி பகுதியில் டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர்
கணபதி
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 21). இவர் கோவை-சத்தி சாலையில் 100 அடி ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று டாஸ்மாக் பாருக்கு வந்த ரத்தினபுரி பி.எம்.சாமி காலனியை சேர்ந்த சிமோன் கிறிஷ்டோபர் (31) என்பவர் குடிபோதையில், ராஜாராமை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி அவரிடம் இருந்த ரூ.100-யை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிமோன் கிறிஷ்டோபரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story