ரியல் எஸ்டேட் உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு

நெல்லையில் ரியல் எஸ்டேட் உரிமையாளரை மிரட்டி பணம் பறித்தவர்கள் குறித்து போலீசார் விசாாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது50). ரியல் எஸ்டேட் உரிமையாளரான இவர் சம்பவத்தன்று பேச்சிமுத்து என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு மறைந்து இருந்த 2 பேரும,் பேச்சிமுத்துவும் சேர்ந்து ஜெயக்குமாரிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்தனர். மேலும் அவரை ஆபாசமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டு விடுவதாக மிரட்டி ரூ.1 லட்சம் வரை பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





