மானூர் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டத்தில் ஆவேசமாக பேசியவர் மயங்கி விழுந்து சாவு


மானூர் தாலுகா அலுவலகத்தில்  சமாதான கூட்டத்தில் ஆவேசமாக  பேசியவர் மயங்கி விழுந்து சாவு
x

மானூர் தாலுகா அலுவலகத்தில், சமாதான கூட்டத்தில் ஆவேசமாக பேசியவர் மயங்கி விழுந்து இறந்தார்

திருநெல்வேலி

மானூர்:

மானூர் தாலுகா அலுவலகத்தில், சமாதான கூட்டத்தில் ஆவேசமாக பேசியவர் மயங்கி விழுந்து இறந்தார்.

கோவில் கொடை விழா

நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா தேவர்குளம் அருகே உள்ள மேலஇலந்தகுளத்தில் சீவலப்பேரி சுடலைமாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொடை விழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் மற்றும் காவல் துறையினர், மானூர் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்திற்கு மானூர் தாசில்தார் சுப்பு தலைமை தாங்கினார். வன்னி்க்கோனேந்தல் வருவாய் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், மேலஇலந்தகுளம் கிராம நிர்வாக அலுவலர் சுடலைமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மயங்கி விழுந்து சாவு

இரு தரப்பினருக்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு தரப்பை சேர்ந்த பச்சையா நாடார் (வயது 70) என்பவர் ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story