போலி டாக்டர் கைது

போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி,
காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 52). இவர் சித்த மருத்துவம் படித்துவிட்டு அமராவதிபுதூரில் கிளினிக் நடத்தி வந்தார். அங்கு ஆங்கில மருத்துவமுறையில் சிகிச்சை மேற்கொண்டதாக புகார் எழுந்தது. அதன்பேரில் சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர் ஆங்கில மருத்துவ முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





