வெங்கல் கிராமத்தில போலி டாக்டர் கைது


வெங்கல் கிராமத்தில போலி டாக்டர் கைது
x

வெங்கல் கிராமத்தில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் கிராமம் நேரு பஜாரில் கிளினிக் ஒன்று கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் ராமச்சந்திரன் (வயது 71). இவர் பி.யூ.சி. படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக தொடர்ந்து சுகாதாரத்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) இளங்கோவன் தலைமையில் மருத்துவ குழுவினர் கிளினிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ராமச்சந்திரன் பி.யூ.சி மட்டும் படித்துவிட்டு அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார்.

மேலும், நோயாளிகளுக்கு ஊசி போடுவது உள்ளிட்ட பல்வேறு வகையான சிகிச்சைகளை அளித்து வந்ததாக தெரிகிறது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு இருந்த தெர்மாமீட்டர், ஸ்டெதாஸ்கோப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து ராமச்சந்திரனை வெங்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் ராமச்சந்திரனை கைது செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


Next Story