உசிலம்பட்டி அருகே போலி டாக்டர் கைது


உசிலம்பட்டி அருகே போலி டாக்டர் கைது
x

உசிலம்பட்டி அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

புகார்

உசிலம்பட்டி அருகே உள்ளது பாப்பாபட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் அதிமன்னன் (வயது 52). இவர் அதே ஊரில் அனுமதியின்றி மருந்துக்கடையுடன் இணைந்து ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் செல்வராஜ், மருத்துவமனை கண்காணிப்பாளர் நடராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பாப்பாபட்டி கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் அனுமதியின்றி மருந்து கடையும், ஆங்கில மருத்துவமும் பார்த்து வந்த அதிமன்னனை பிடித்து உத்தப்பநாயக்கணூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கைது

பட்டதாரியான அதிமன்னன் ஆங்கில மருத்துவம் பார்த்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலியாக மருத்துவம் பார்த்ததாக கடந்த 2013-ம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் கிராமப்புறங்களில் போலி மருத்துவர்களிடம் மருத்துவம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். போலி மருத்துவம் பார்க்கும் நபர்கள் குறித்து தகவல் அளித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உசிலம்பட்டி அரசு மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story