சேலத்தில் கார் வாடகை தகராறு:பிரபல ரவுடி கட்டையால் அடித்துக்கொலை


சேலத்தில் கார் வாடகை தகராறு:பிரபல ரவுடி கட்டையால் அடித்துக்கொலை
x

கோரிமேடு அருகே கார் வாடகைக்கு செல்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் படுகாயம் அடைந்த ரவுடி பரிதாபமாக இறந்தார்.

சேலம்

கன்னங்குறிச்சி

கோரிமேடு அருகே கார் வாடகைக்கு செல்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் படுகாயம் அடைந்த ரவுடி பரிதாபமாக இறந்தார்.

பிரபல ரவுடி

சேலம் கோரிமேடு அருகே உள்ள ஜல்லிக்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்கிற கிட்டான் மணி (வயது 30). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழைய கார் ஒன்று வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். அதே பகுதியை சேர்ந்த மகாவிஷ்ணு (28) என்பவர் மேட்டூர் சென்று வர அந்த காரை வாடகைக்கு கேட்டுள்ளார். இதற்காக கிட்டான் மணி தயார் நிலையில் இருந்துள்ளார்.

ஆனால் நேற்று முன்தினம் இரவு மகாவிஷ்ணு வேறு காரில் மேட்டூர் சென்று வந்துள்ளார். இதுகுறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மகாவிஷ்ணு கட்டையால் ரவுடி கிட்டான் மணியை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பரிதாப சாவு

இது குறித்து கிட்டான் மணியின் தாயார் சரஸ்வதி கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாவிஷ்ணுவை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கிட்டான் மணி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story