விவசாயி மீது தாக்குதல்


விவசாயி மீது தாக்குதல்
x

விவசாயி மீது தாக்குதல் நடந்தது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதனூர் காலனி தெருவை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (வயது48). விவசாயி. இவருடைய வீட்டின் அருகில் வசிப்பவர் கல்யாணசுந்தரம் (35). இவர் தனக்கு சொந்தமான வீடு கட்ட பயன்படுத்தப்படும் ஜல்லியை ஜெயப்பிரகாஷ் வீட்டு வாசலில் கொட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. அப்போது கல்யாணசுந்தரம் மற்றும் அவருடைய சகோதரர்கள் சிங்காரவேல், கமலநாதன் (37), தாயுமானவன் உள்பட 4 பேர் ஜெயப்பிரகாஷை தாக்கினர். இதில் காயம் அடைந்த ஜெயப்பிரகாஷ் திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், ஆலிவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபரஞ்சோதி மற்றும் போலீசார் கல்யாணசுந்தரம், தாயுமானவன், கமலநாதன், சிங்காரவேல் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் கல்யாணசுந்தரம், கமலநாதன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story