விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 31 July 2023 6:45 PM GMT (Updated: 31 July 2023 6:46 PM GMT)

திருமருகல் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் நெய்க்குப்பை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 65) விவசாயி.இவர் சம்பத்தன்று தனது மனைவியிடம் வயலுக்கு மருந்து தெளிக்க பணம் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் இல்லை என்றும், பணம் இருக்கும் போது மருந்து வாங்கி வயலில் தெளிக்கலாம் என தெரிவித்துள்ளார். இதில் மனமுடைந்த மனோகரன் வயலுக்கு தண்ணீர் விட்டு வருவதாக கூறிவிட்டு வெளியே சென்று விஷம் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மறுநாள் காலை டீக்கடைக்கு டீ குடிக்க சென்றபோது வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். பின்னர் .அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story