விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 10 Sept 2023 12:15 AM IST (Updated: 10 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் குமார் (வயது 45). விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டில் வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த குமாருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.b

1 More update

Next Story