தியாகதுருகம் அருகேவிஷம் குடித்து விவசாயி தற்கொலை


தியாகதுருகம் அருகேவிஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை் செய்து கொண்டாா்.

கள்ளக்குறிச்சி


தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 84). விவசாயி. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து இவருக்கு அவ்வப்போது கண் வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியூர் செல்வதாக கூறிவிட்டு சென்றவர், புக்கிரவாரியில் உள்ள ஒரு உணவகம் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பெரியசாமி இறந்து போனதாக கூறியுள்ளனர். இது குறித்து அவரது மனைவி ராஜம் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

1 More update

Next Story