விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

தியாகதுருகம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே விருகாவூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 44) விவசாயி, இவர் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிப்பால் அவதி அடைந்து வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதில் மனமுடைந்த அவர் தனது விவசாய நிலத்தில் வைத்து விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story