விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

பண்ருட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி அடுத்த புதுப்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பூராசாமி(வயது 40). விவசாயி. சம்பவத்தன்று, இவர் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டார். இதை அவருடைய மனைவி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பூராசாமி, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story