விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

திருவண்ணாமலை


கீழ்பென்னாத்தூர் தாலுகா சோமாசிபாடி சு.பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 41), விவசாயி.

இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ராஜாமணி கடனுதவி பெற்று 2 டிராக்டர்களை வாங்கி விவசாயம் செய்து வந்தார். அவரால் கடந்த சில நாட்களாக டிராக்டர்களுக்கு தவணைத் தொகை கட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதில் தேவி கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த ராஜாமணி விஷத்தை குடித்து விட்டு மயக்கமடைந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உறவினர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story