விவசாயி விஷம் குடித்து தற்கொலை


விவசாயி விஷம் குடித்து தற்கொலை
x

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

அம்பை:

கல்லிடைக்குறிச்சி அருகே உலுப்படிபாறை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கொம்பன் (வயது 49). விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கொம்பனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடும்பத்தினரிடம் தகராறு செய்தார். தொடர்ந்து அவர், குடும்பத்தினரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். எனவே மதுப்பழக்கத்தை கைவிடுமாறு கொம்பனிடம் உறவினர்கள் அறிவுறுத்தினர். இந்த நிலையில் சம்பவத்தன்று கொம்பன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story