விவசாயி விஷம் குடித்து தற்கொலை


விவசாயி விஷம் குடித்து தற்கொலை
x

விவசாயி விஷம் குடித்து இறந்தார்

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே தெற்கு மயிலோடை பஞ்சாயத்தை சேர்ந்த தலையால்நடந்தான்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 50). விவசாயி. இவர் மூல நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி வள்ளியம்மாள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுப்பிரமணியனுக்கு 5 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.


Next Story